விவசாய மின் இணைப்பில் மாற்றம் கொண்டுவர முடிவு

தமிழகத்தில், விவசாய மின் இணைப்பு வழங்குவது தொடர்பான சட்ட விதிகளில், திருத்தம் கொண்டு வர, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

புதிய விதிகளின்படி, விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு முன், மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள், வரிசைப்படுத்தப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், விண்ணப்ப தாரர்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்கப்படும். முன்னுரிமை விவரங்கள், கோட்ட அளவில் பராமரிக்கப்படும். ஒரு நிலத்திற்கு, ஒரு மின் இணைப்பு பெறப்பட்டு, நிலம் பங்கீடு செய்யப்படும் போது, அரை ஏக்கருக்கு மேல் இருந்தால், புதிய மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். இதுபோன்ற பல்வேறு திருத்தங்கள் கொண்டு வருவதற்கான வரைவு அறிக்கை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தம் தொடர்பான கருத்து, ஆலோசனை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர், அடுத்த மாதம், 11ம் தேதிக்குள், ஆணையத்தின் முகவரிக்கு தெரிவிக்கலாம்


No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click