கோவை மாநகர் மின்நுகர்வோருக்கான, 24 மணிநேரம் இயங்கும் அழைப்பு மையத்தின் எண் மாற்றம்

கோவை மாநகர் மின்நுகர்வோருக்கான, 24 மணிநேரம் இயங்கும் அழைப்பு மையத்தின் எண் மாற்றப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் புகார்களை புதிய எண்ணில் மட்டும் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாநகர் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும், மின்தடை மற்றும் மின்சார பழுது தொடர்பான புகார்களுக்கு மின் நுகர்வோரின் மற்றும் பொதுமக்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் அழைப்பு மையத்தின் '155333' என்ற தொலைபேசி எண்ணை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் '1912' என்ற எண்ணாக மாற்றியுள்ளது. இதனால், புகார் சம்பந்தப்பட்ட அழைப்புகளுக்கு புதிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to dinamalar

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click